அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ்அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ் ... தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி தேனி விவ­சா­யி­க­ளுக்கு கை கொடுக்கும்திசு­வாழை: அரபு நாடு­க­ளுக்கு ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பாதுகாப்பாக பயணம் செய்யலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2014
17:12

இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் போது தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம்.கார், வேன் ஓட்டுபவர்கள் தரம் வாய்ந்த பெல்ட்களை அணிந்து கொள்ள வேண்டும். நல்ல மனநிலை மற்றும் உடல்நிலை இருக்கும்போது மட்டுமே வாகனத்தை ஓட்ட முன்வர வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உடல் சோர்வாக இருக்கும்போது வாகனத்தை ஓட்டக்கூடாது. வாகனத்தை இயக்குவதற்கு முன், வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஓட்டவேண்டும். வாகனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பதிவுச்சான்று, காப்புச்சான்று ஆகியவை வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தின் பதிவு எண், அந்த வாகனத்தின் முன்பும், பின்பும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் டயர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சாலையில் வழுக்கிச் செல்லாமல் இருக்க டயர்களில் உள்ள பட்டன்கள் சரியாக இருக்க வேண்டும். டயர்களில் சரியான அளவு காற்று இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.சரியான அளவு காற்று நிரப்பப்பட்ட கூடுதல் டயர் ஒன்றை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில் சரியான அளவு உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். அதேப்போன்று ஒலிப்பான்களையும் சரிபார்க்க வேண்டும். அனைத்து விளக்குகளும் சரியாக எரிகிறதா என்பதையும் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் எல்லாவற்றையும் உறுதிசெய்து கொண்டு வாகனங்களை இயக்கினால், அது நமக்கும் மட்டுமல்லாமல் ரோட்டில் செல்லும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பான பயணமாக அமையும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)