பதிவு செய்த நாள்
02 ஜன2015
11:35
மும்பை : புத்தாண்டு தினத்தில் பங்குசந்தைகள் சிறு உயர்வுடன் முடிந்த நிலையில் இன்று(ஜன., 2ம் தேதி) வருடத்தின் இரண்டாம் நாளில் பங்குசந்தைகள் நன்கு உயர்வுடன் காணப்படுகி்ன்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்நது 27,723.65–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 60.55 புள்ளிகள் உயர்ந்து 8,344.55–ஆகவும் இருந்தது. தொடர்ந்து காலை 11.00 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிப்டி 90 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் இருந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவு எண்ணெய், ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவன பங்குகளை வாங்க தொடங்கியிருப்பது போன்ற காரணங்களால் பங்குசந்தைகளில் உயர்வு காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|