பதிவு செய்த நாள்
07 ஜன2015
10:07
புதுடில்லி : 2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகமாகவும், வேகமாகவும் சொத்து சேர்த்தவர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. மோதிலால் ஆஸ்வல் என்ற நிறுவனம் நடத்திய அதிக சொத்து சேர்த்தவர்கள் குறித்த 19வது ஆண்டு அறிக்கையின்படி, அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்திலும், வேகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் எய்சர் மோட்டார்ஸ் முதலிடத்திலும் உள்ளன. 2008-13 வரையிலான 5 ஆண்டுகளில் அதிகம் சொத்து சேர்ந்த நிறுவனங்களின் பட்டியலிலும் டி.சி.எஸ்.,தான் முதலிடத்தில் இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.3.6 ட்ரில்லியன் சொத்துக்களை சேர்த்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே 5 ஆண்டுகளில் அதிகம் சொத்து சேர்ந்த ஒரே நிறுவனம் டி.சி.எஸ்.,தான். வேகமாக சொத்து சேர்த்த நிறுவனங்களில் எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விட 93 சதவீதம் அதிகமாகும். இவ்விரு பட்டியல்களிலும் முன்னணியில் இருக்கும் ஒரே நிறுவனம் ஹச்.சி.எல்., டெக்னாலஜிஸ். கடந்த 10 ஆண்டுகளில் சீரான அளவில் சொத்து சேர்ந்த நிறுவனங்களில் கோடாக் மகேந்திரா முதல் இடம் வகிக்கிறது. இதே போன்று 10 ஆண்டுகளில் அதிக அளவில் சொத்து சேர்த்த நிறுவனங்களில் சி.எ.ஜி.ஆர்., நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தை தொடர்ந்து ஆசியன் பெயின்ட்ஸ் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|