பதிவு செய்த நாள்
08 ஜன2015
01:19
இந்த ஆண்டு, 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்க, நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசின் முகவராக இருந்து, தமிழகத்தில் சாகுபடியாகும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கொள்முதல் செய்து வருகிறது.ஓராண்டுக்கு, 52.32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசால், தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை அரிசியாக கணக்கிட்டால், 32.51 லட்சம் டன் வரும்.இதற்கு மேல் நெல் கொள்முதல் செய்தால், அதற்கு மத்திய அரசு மானியம் வழங்காது.
இந்த ஆண்டு, சாதாரண நெல் குவின்டாலுக்கு, 1,410 ரூபாய்; சன்னரக நெல் குவின்டாலுக்கு, 1,470 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், சம்பா சாகுபடி, 25 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்துள்ளது. அதேபோல, குறுவை, தாளடி, சொர்ணவாரி, நவரை சாகுபடிகளும் நடக்க வாய்ப்பு உள்ளது.இந்தாண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
சம்பா சாகுபடிக்காக, 2,000 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.சம்பா உட்பட, அனைத்து சாகுபடிகளையும் சேர்த்து, 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து புதிய சாதனை படைக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|