பதிவு செய்த நாள்
08 ஜன2015
16:52
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துக்கத்தில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் வர்த்தகம் முடியும்போது 300 புள்ளிகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் முதலீட்டாளர்களும் முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவு வாங்கியதால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் முடிந்தன௦. கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு இன்று தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி அதிக எழுச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட் எண் சென்செக்ஸ் 365.89 புள்ளிகள் உயர்ந்து 27,274.71–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 132.50 புள்ளிகள் உயர்ந்து 8,234.60–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ., ஹிண்டால்கோ, கெயில் பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|