தங்கம் சவரனுக்கு ரூ. 64 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ. 64 உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு: வட்டி விகித குறைப்பில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
05:15

புதுடில்லி: காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, நாட்டின் பண வீக்கம், 5 சதவீகமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை பொருத்து, ஒவ்வொரு மாதமும், பணவீக்கம் கணக்கிடப்படும். மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நாட்டின் பண வீக்கம் அதிரடியாக குறைந்தது. டிச., 2013ல் 9.87 ஆக இருந்த பண வீக்க விகிதம், கடந்த ஆண்டு நவம்பரில், 4.38 ஆக குறைந்தது. இது, கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவிலான பண வீக்க விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் அதிரடி விலை ஏற்றத்தால், கடந்த நவம்பரில், 4.38 ஆக இருந்த பண வீக்க விகிதம், கடந்த டிசம்பரில், 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அடம்:'வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி வரும் நிலையில், 'நீண்ட காலத்திற்கு நாட்டின் பண வீக்கம் குறைவாக பதிவானால் மட்டுமே வட்டி விகிதக் குறைப்பு பற்றி யோசிக்க முடியும்' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில், இதுவரை இல்லாத வகையில், நாட்டின் பணவீக்கம் 4.38 ஆக குறைந்ததை குறிப்பிட்டு, வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, அமைச்சர் ஜெட்லி வலியுறுத்தினார். இந்நிலையில், டிசம்பருக்கான பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)