பதிவு செய்த நாள்
20 ஜன2015
03:31
நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டையின் நுகர்வு குறைந்து வருவதால், கடந்த, 12 நாளில், 41 காசு வரை சரிந்து, கொள்முதல் விலை, 305 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று, நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர் விவாதித்தனர். அதையடுத்து, முட்டை கொள்முதல் விலையில், 310 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, ஐந்து காசு குறைத்து, 305 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்)சென்னை, 350, பெங்களூரு, 340, மைசூர், 345, ஹைதராபாத், 325, மும்பை, 363, விஜயவாடா, 313, கொல்கத்தா, 360, பர்வாலா, 305, டில்லி, 325.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் முட்டை ஏற்றுமதி சரிவு, குளிர்சீசன் முடிவுக்கு வருதல், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஓட்டல் திறக்கப்படாததால் நுகர்வு சரிவு, தை பூசம் விரதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த, 7ம் தேதி, 346 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, கடந்த, 12 நாட்களில், 41 காசு வரை சரிந்து, நேற்றைய விலையில், 305 காசாக சரிந்து வருவதால், பண்ணையாளர் கவலையடைந்துஉள்ளனர்.நாமக்கல்லில், நேற்று, நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 52 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில், நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 69 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|