பதிவு செய்த நாள்
22 ஜன2015
10:58
ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், இந்தியாவில், சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், வரும் காலத்தில், தங்கள் கார்களில் இடம் பெறும் புதிய தொழில்நுட்பங்களை அவ்வப்போது, முன்கூட்டியே அறிமுகம் செய்யும். அந்தவகையில், ‘ஐடிரைவ் சிஸ்டம்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை, இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுவாக, தற்போதைய சொகுசு கார்களில், டச் ஸ்கிரீன் வசதி இடம் பெற்று இருக்கும். ஆனால், ‘ஐ டிரைவ் சிஸ்டம்’ வசதியுடன் கூடிய காரில், டச் ஸ்கிரீனை தொட கூட வேண்டாம். டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ள பகுதி, கியர் உள்ள பகுதி, ஸ்டியரிங் உள்ள பகுதிக்குள், உங்கள் கைகளை அசைத்தால் போதுமானது. அதற்கு ஏற்றவாறு, கட்டளைகளை ஏற்று, டச் ஸ்கிரீன் செயல்பட துவங்கும். கைகளின் அசைவுகளை கண்டறிய, காரின் மேற்புறத்தில், சென்சார் பொருத்தப்பட்டு இருக்கும். காரின் பின்இருக்கையில் பொருத்த, ‘ஸாம்சங் டேப்லெட்’ பி.எம்.டபிள்யூ., குறியீடு பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீன் உருவாக்கப்பட்டுள்ளது.
காரின் பின் இருக்கையில் அமருபவர்கள், காரின் ஏசி வசதி, ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை, இந்த டச் ஸ்கிரீன் மூலமாகவே இயக்க முடியும். இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள், பி.எம்.டபிள்யூ., 7 சீரிஸ்மாடல் காரில் பொருத்தப்பட உள்ளது. இந்த கார், இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுமாக உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|