தங்கம் விலை சற்று குறைவுதங்கம் விலை சற்று குறைவு ... தங்கம் ரூ.8 குறைவு தங்கம் ரூ.8 குறைவு ...
துாத்துக்குடி–துபாய் சரக்கு போக்­கு­வ­ரத்து துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
05:02

துாத்­துக்­குடி : துாத்­துக்­குடி வ.உ.சி., துறை­மு­கத்தில் இருந்து நேர­டி­யாக துபாய் நாட்­டிற்கு சரக்கு போக்­கு­வ­ரத்து நேற்று துவக்­கப்­பட்­டது. இதனால் வீணான கால விரயம், பண விரயம் மிச்சம் செய்­யப்­பட்­டுள்­ளது, என துறை­முக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
துாத்­துக்­குடி துறை­மு­கத்­தி­லி­ருந்து செல்லும் சரக்கு கப்­பல்கள் இது நாள் வரை இலங்­கையில் உள்ள கொழும்பு சர்­வ­தேச துறை­மு­கத்­திற்கு சென்று அங்­கி­ருந்து தான் வெளி நாடு­க­ளுக்கு சரக்கு போக்­கு­வ­ரத்து செய்­யப்­பட்டு வந்­தது. வீணான கால­ விரயமும், பணமும் செல­வா­கிக் ­கொண்­டி­ருந்­தது.
நேர­டி­யாக போக்­கு­வ­ரத்து: துாத்­துக்­குடி துறை­மு­கத்தில் பி.எஸ்.ஏ., சிக்கால் நிறு­வனத்தின் சரக்கு பெட்­டக முனையம் உள்­ளது. தற்­போது தக் ஷின் ­பாரத் சரக்கு பெட்­டக முனையம் புதி­ய­தாக செயல்­பட்டு வரு­கி­றது. இந் நிறு­வ­னமும், எஸ்.எஸ்.எல்., குஜராத் நிறு­வ­னமும் இணைந்து, நேர­டி­யாக துபாய் நாட்­டிற்கு சரக்கு போக்­கு­வ­ரத்து செய்ய நட­வ­டிக்கை எடுத்­தது. இதன் படி தற்­போது இலங்­கையில் உள்ள கொழும்பு துறை­மு­கத்­திற்கு சென்­றுதான் சரக்கு போக்­கு­வ­ரத்துக் கப்­பல்கள் இயங்கி வந்­தது.
துாத்­துக்­கு­டியில் இருந்து சிறு கப்­பல்கள் மூலம் சரக்­குகள் எடுத்து செல்­லப்­பட்டு, கொழும்பு சர்­வ­தேச முனை­யத்தில் பெரிய கப்­பல்­க­ளுக்கு சரக்­குகள் மாற்றம் செய்து வெளி நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்டு வந்­தது. தற்­போது நேர­டி­யாக கொழும்பு துறை­மு­கத்­திற்குள் செல்­லாமல் நேர­டி­யாக கொச்சின் துறை­முகம் சென்று, அங்­கி­ருந்து துபாய் நாட்­டிற்கு சரக்­குகள் கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ளது.
துவக்கம்: துாத்­துக்­கு­டி­யி­லி­ருந்து துபாய்க்கு நேர­டி­யாக சரக்கு போக்­கு­வ­ரத்துக் கப்பல் எஸ்.எஸ்.எல். குஜராத் மூலம் நேற்று துவக்­கப்­பட்­டது. இதில் 487 சரக்கு பெட்­ட­கங்கள் ஏற்றி செல்­லப்­பட்­டது. இந்த கப்­பலில் 24 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்­குகள் கொண்டு செல்­ல­மு­டியும். நேற்று இதில் மூன்றில் ஒரு பங்கு சரக்­குதான் ஏற்­றப்­பட்­டி­ருந்­தது. முதல் சேவையை துாத்­துக்­குடி துறை­முக பொறுப்­புக்­க­ழ­கத்­த­லைவர் ஆனந்த சந்­திர போஸ் துவக்கி வைத்தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது: துாத்­துக்­குடி -துபாய் நேரடி சரக்கு போக்­கு­வ­ரத்தால், வீணான கால விரயம் தடுக்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பு சென்றால் 10 நாட்­க­ளுக்கு பின் தான் துபாய் செல்­ல­மு­டியும். நேர­டி­யாக செல்லும் போது கொழும்பில் காத்­தி­ருக்க வேண்­டிய மூன்று நாட்கள் மிச்­ச­மாகும். அங்கு பயணம் செய்யும் நேரமும் குறையும் என்­பதால் ஆறு நாட்­களில் துபாய்க்கு சென்று சேரும். கொழும்பு துறை­மு­கத்­திற்­கான கட்­டணம் கட்ட வேண்­டி­ய­தில்லை. பணமும் மிச்­ச­மாகும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)