பதிவு செய்த நாள்
19 பிப்2015
13:45
பள்ளி செல்லும் மாணவ மாணவியர், பாதுகாப்பாக பள்ளியை சென்று அடைந்தனரா, அவர்கள் சரியான நேரத்திற்கு, வீடு வந்து சேருகின்றனரா என்பது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் கவலையாக உள்ளது. பள்ளி வாகனங்கள் குறித்து, பல்வேறு நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டும், அறிவுரைகள் கூறப்பட்டும் கவலை தீர்ந்ததாக தெரியவில்லை.
கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இப்பிரச்னனையை தீர்க்க, ‘ஸ்கூல்மேன்’ என்ற, ‘டிராக்கிங்’ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பம், டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அனுப்பும், பள்ளி பஸ்களில் கண்டிப்பாக இடம் பெறும். பிற பள்ளி வாகனங்களில் பொருத்த, தனியாக விற்பனைசெய்யப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம், மாணவரின் பெற்றோருக்கு மாணவரின் வருகை மற்றும் பள்ளி சென்று சேர்ந்தது குறித்த எஸ்.எம்.எஸ்., அலர்ட் மெசேஜ் வரும். இத்துடன், மேப் மூலமும், பள்ளி வாகனம் தற்போது எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். பள்ளி வாகனம் முறையாக இயக்கப்படுகிறதா, பிரச்னை உள்ளதா என்பது குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு எஸ்.எம்.எஸ்., அல்லது இ – மெயில் அலர்ட் வந்து சேரும்.
‘டாடா அல்ட்ரா பி.எஸ்., 3 – பாதுகாப்பான பள்ளி பஸ்’ என்ற புதிய வாகனத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில், விற்பனைக்கு அனுப்பி உள்ளது. இந்த பஸ்சில், இந்த புதிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|