பதிவு செய்த நாள்
26 பிப்2015
10:52
இந்தியாவில் தற்போது, 110 சிசி மற்றும், 125 சிசி திறன் கொண்ட கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகி வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டும், ‘ஜிர்’ என்ற பெயரில், 150 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. தற்போது, இந்த போட்டியில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.ஐ.எல்.,) நிறுவனமும் குதித்து உள்ளது. இந்த நிறுவனம், கடந்த ஆண்டு டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், 125 சிசி திறன் கொண்ட, ‘பிசிஎக்ஸ்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் தற்போது, 150 சிசி திறனுடன் வெளிவர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
* இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும், ஸ்கூட்டர்களை விட, ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர் அளவில் சற்று பெரியதாக இருக்கும்.
* விற்பனையில் உள்ள, 110 சிசி ஸ்கூட்டர்கள், 100 –110 கிலோ எடை கொண்டதாக உள்ளன. ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர், 130 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
* இந்த ஸ்கூட்டரில், 153 சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும்.
* விமேடிக் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டது.
* பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, எட்டு லிட்டர்.
* அலாய் சக்கரங்கள், டிஸ்க் பிரேக் வசதி கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|