பதிவு செய்த நாள்
19 மார்2015
18:00
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நன்கு ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் இறுதியில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் துவங்கின. குறிப்பாக சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்வுடன் துவங்கியது. ஆனால் அதன்பின்னர் முக்கிய துறை பங்குகளான வங்கி, எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்க தொடங்கியதால் இறுதியில் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்ன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.45 புள்ளிகள் சரிந்து 28,469.67-ஆகவும், நிப்டி 51.25 புள்ளிகள் சரிந்து 8,634.65-ஆகவும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், வங்கி தொடர்பான பங்குகள் 1.76 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 1 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் 0.68 சதவீதமும், எப்எம்சிஜி., பங்குகள் 0.64 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|