பதிவு செய்த நாள்
16 ஏப்2015
16:55
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் சரிந்தன. தொடர்ந்து நாட்டின் முக்கிய ஐடி நிறுவன பங்குகளான டிசிஎஸ்., இன்போசிஸ், விப்ரோ நிறுவன பங்குகள் சரிந்ததாலும், பெட்ரோல்–டீசல் விலை குறைப்பால் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.65 புள்ளிகள் சரிந்து 28,666.04–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 43.50 புள்ளிகள் சரிந்து 8,706.70–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ்., பங்குகள் 1.50 சதவீதமும், விப்ரோ நிறுவன பங்குகள் 0.82 சதவீதமும், இன்போசிஸ் பங்குகள் 1 சதவீதமும் சரிந்தன. இவை தவிர்த்து ஹீரோ மோட்டோ கார்ப், சன்பார்மா, சிப்லா, எல் அண்ட் டி., டாக்டர் ரெட்டி, ஐடிசி., பிபிசிஎல்., எச்பிசிஎல்., போன்ற நிறுவன பங்குகளும் சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|