பதிவு செய்த நாள்
14 மே2015
10:16
மும்பை : கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்த பங்குசந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்டன, பங்குசந்தைகளும் உயர்வுடன் முடிந்தன. ஆனால் இன்றைய பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்றதால் பங்குசந்தைகள் சரிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 302.48 புள்ளிகள் சரிந்து 26,948.62–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 98.15 புள்ளிகள் சரிந்து 8,137.30–ஆகவும் இருந்தன. குறிப்பாக வங்கி, மருத்துவம், ஐடி., உலோகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட அநேக பங்குகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும் சற்றுநேரத்தில் பங்குசந்தைகள் சற்று மீண்டன. காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 134.53 புள்ளிகள் சரிந்து 27,116.57 புள்ளிகளிலும், நிப்டி 45.05 புள்ளிகள் சரிந்து 8190 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|