பதிவு செய்த நாள்
14 மே2015
17:12
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 98 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்றதால் தொடக்கத்தில் அதிக சரிவு இருந்தன. ஆனால் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம், பணவீக்கம் சரிந்தது, அதன்காரணமாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பால் பங்குசந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. ஆனபோதும் இறுதியில் பங்குசந்தைகள் சிறு சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.04 புள்ளிகள் சரிந்து 27,206.06–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 11.25 புள்ளிகள் சரிந்து 8,224.20–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா, எச்டிஎப்சி., ஐடிசி., ஐசிஐசிஐ., ரிலையன்ஸ், எல் அண்ட் டி., டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிந்தும், ஹிண்டால்கோ, எஸ்பிஐ., பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|