பதிவு செய்த நாள்
04 ஜூன்2015
10:18
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த இருதினங்களில் 1,011.79 புள்ளிகள் சரிவை சந்தித்த பங்குவர்த்தகம் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது உயர்வுடன் துவங்கின. காலை 9.15 மணியளவில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 111.64 புள்ளிகள் உயர்ந்து 26,948.84 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 24.95 புள்ளிகள் உயர்ந்து 8,160.05 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ஆனால் இந்த உயர்வு கொஞ்சம் நேரம் தான் நீடித்தது. மீண்டும் பங்குசந்தைகள் சரிய தொடங்கியுள்ளன. ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., ஹிண்டால்கோ உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தால் பங்குசந்தைகள் சரிய தொடங்கின. இருப்பினும் 10.15 மணியளவில் சென்செக்ஸ் சற்று உயர்ந்தது. இதனால் இன்றைய வர்த்தகம் மந்தமான சூழலில் ஏற்ற – இறக்கமாக வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|