பதிவு செய்த நாள்
04 ஜூன்2015
17:20
மும்பை : கடந்த இருதினங்களில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்த பங்குசந்தைகள், தொடர்ந்து மூன்றாவது நாளும் சரிவில் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கியபோது பங்குசந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, உலோகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிவை சரிந்ததால் இன்றைய வர்த்தகம் இறுதியில் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 23.78 புள்ளிகள் சரிந்து 26,813.42–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 4.45 புள்ளிகள் சரிந்து 8,130.65–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் சரிந்தும், 11 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மொபைல் நிறுவன பங்குகள் 0.70 சதவீதமும், உலோகம் தொடர்பான பங்குகள் 1.11 சதவீதமும், மருத்துவம் சார்ந்த பங்குகள் 0.77 சதவீதமும், நுகர்வோர் தொடர்பான பங்குகள் 0.75 சதவீதமும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|