தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்வு (ரூ. 63.67) இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்வு (ரூ. 63.67) ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 283 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2015
17:28

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே நல்ல ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதே ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8,150 புள்ளிகளையும் தாண்டின.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, இந்திய பங்குகளுக்கு பெடரல் வங்கி அளித்துள்ள ஒத்துழைப்பு, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 283.17 புள்ளிகள் உயர்ந்து 27,115.83–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 83.05 புள்ளிகள் உயர்ந்து 8,174.60–ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், 10 நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 5 சதவீதம் ஏற்றம் கண்டன. அந்த நிறுவனம் இந்தாண்டு இறுதியில் 4ஜி சேவையை விரிவுப்படுத்துகிறது. இதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் அதிகளவு ஏற்றம் கண்டன. இவை தவிர்த்து மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி., எச்டிஎப்சி., ஹிண்டால்கோ, எஸ்பிஐ., போன்ற நிறுவன பங்குகளும் அதிக ஏற்றம் கண்டன.
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்காரணமாக வீட்டு கடன் தொடர்பான நிறுவன பங்குகள் 4.28 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)