பதிவு செய்த நாள்
16 ஜூலை2015
17:04
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்றும் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த இந்திய பங்குசந்தைகள் இறுதியிலும் அதே ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 247.83 புள்ளிகள் உயர்ந்து 28,446.12–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 84.25 புள்ளிகள் உயர்ந்து 8,608.05–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1552 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1266 நிறுவன பங்குகள் சரிந்தும், 165 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ், பெல், எச்டிஎப்சி., சிப்லா, டாக்டர் ரெட்டி நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றன. அதேசமயம் விப்ரோ, ஹீரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டிசிஎஸ். பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|