பதிவு செய்த நாள்
23 ஜூலை2015
16:49
மும்பை : கடந்த இருநாட்களாக ஏற்றத்துடன் முடிந்த பங்குவர்த்தகம் இன்று சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகம் துவங்கியபோதே மந்தமாக தொடங்கியது. தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்த பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.09 புள்ளிகள் சரிந்து 28,370.84–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 43.70 புள்ளிகள் சரிந்து 8,589.80–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1525 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1316 நிறுவன பங்குகள் சரிவுடனும், 167 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி மற்றும் என்டிபிசி நிறுவன பங்குகள் அதிக லாபமும், பஜாஜ் அட்டோ, டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|