பதிவு செய்த நாள்
11 ஆக2015
11:49
‘ஆடி’ நிறுவனம், அதிக சக்தி கொண்ட, ‘எஸ் 8 பிளஸ்’ ரக காரை, சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘சொகுசு கார்களில், ஸ்போர்ட்ஸ் கார் போன்ற செயல்பாட்டை உடையதாக இது இருக்கும்’ என, ஆடி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன், 4.0 லிட்டர் மாடலில், 513 குதிரை சக்தி திறனுடைய, சக்தி மிக்க இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதனால், ‘பிக்கப்’ பிரமாதமாக இருக்குமாம். 3.8 வினாடிகளில், 100 கி.மீ., வேகத்தை எட்டக்கூடியது. இதில், அதிகபட்சம், மணிக்கு, 250 கி.மீ., வேகத்தில் செல்லலாம். இன்னும் வேகம் தேவைப்பட்டால், ‘டயனமிக் இன்ஜின்’ பொருத்திய மாடலும் கிடைக்கிறது; அதில், மணிக்கு, 305 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். அத்துடன், 21 அங்குல உலோக சக்கரங்கள், பவர் டோர், டி.வி.டி., பிளேயர் வசதி உள்ளிட்ட பல அசத்தல் அம்சங்களும் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|