பதிவு செய்த நாள்
14 ஆக2015
06:54
சென்னை:‘‘பருவம் தவறி பெய்த கன மழையால், தங்கத்தின் தேவை, 155 டன்னாக குறைந்தது,’’ என, உலக தங்க கவுன்சில் (இந்தியா) நிறுவன நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், பருவம் தவறி கன மழை பெய்தது. ஜூன் வரையிலான, இரண்டாவது காலாண்டில், வறட்சி நிலவியது.இதனால், இரண்டாவது காலாண்டில், தங்கத்தின் தேவை, 155 டன்னாக குறைந்தது. இது, 2014ல் இதே காலகட்டத்தில், 205 டன்னாக இருந்தது.இதே காலத்தில், மதிப்பு அடிப்படையில், தங்கத்தின் தேவை, 50,780 கோடி ரூபாயில் இருந்து, 37,500 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.வரும் காலங்களில், முகூர்த்த நாட்கள் குறைவாக இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், தங்கத்தின் தேவை, 915 டன்னாக இருக்கும். இது, கடந்த ஆண்டில், 1,048 டன்னாக இருந்தது.தங்கத்துக்கு முக்கியச் சந்தைகளாக உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில், தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தேவை அதிகரித்து வருகிறது.‘அசோக சக்கரம் உருவம் பொறித்த தங்க நாணயம் விற்பனை செய்யப்படும்’ என்ற, மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|