பதிவு செய்த நாள்
19 ஆக2015
12:54
நிசான் நிறுவனம், தன், ‘எக்ஸ் டிரெயில்’ என்ற எஸ்.யு.வி., வாகனத்தை இந்தியாவில், மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான, நிசான், இந்தியாவில், 2004-ல், அடியெடுத்து வைத்தபோது, எக்ஸ் டிரெயில் வாகனத்தைத் தான், முதன்முதலில் அறிமுகம் செய்தது. அது, கடந்த ஆண்டு வரை, விற்பனையாகி வந்தது. ஆனால், வரவேற்பு குறைந்ததால், அந்நிறுவனம், அதை நிறுத்தியது.
இந்நிலையில், புதிய தோற்றத்துடனும், மேலும் சிறிய மாற்றங்களுடன், எக்ஸ்–டிரெயில் வாகனம், இந்திய சாலைகளில் மீண்டும் வலம் வரவுள்ளது. இதில், 2 லிட்டர், டி.சி.ஐ., இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. முதல் முறையாக, இந்த மாடலில் ஏழு பேர் அமர வகை செய்யப்பட்டுள்ளது. இதில், சாலைகளின் தன்மைக்கேற்ப மாறும், ‘ஆக்ட்டிவ் ரைடு கன்ட்ரோல் சஸ்பென்ஷன்’ வசதி உண்டு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|