பதிவு செய்த நாள்
23 ஆக2015
14:44
இந்த பண்டிகை சீசனுக்கு, ‘ஹயேதே’ பைக்குடன், சுசூகி நிறுவனம், மற்றொரு பிரபல மாடலான, ‘கிக்சர்’ 150 சி.சி., பைக்கை, புதிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘சுசூகி’ நிறுவனம் தன் பைக்குகளில் வழக்கமாக, நீல நிறத்துக்கு அடுத்தபடியாக, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தை அதிகம் பயன்படுத்தும். ஆனால், புதுப்பிக்கப்பட்ட மாடலில், முதல் முறையாக, இரு வண்ணங்கள் கலந்த, கவர்ச்சிகரமான பைக்குகளை உருவாக்கி உள்ளது. அதனால், அதன், ‘ஸ்டாண்டர்ட்டு மாடலை’ விட, விலை, சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்ஜினை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லை. முந்தைய, ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும், 154.9 சி.சி., சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் தான், இதற்கும் பொருத்தப்பட்டுள்ளது.இந்திய சாலைகளில் வலம் வரும், சிறந்த, 150 சி.சி., பைக்குகளில், ‘கிக்சர்’ பைக்கும் ஒன்று. அதில், ‘டூவல் டோன்’ நிறமும், புதிதாக சேர்ந்து கொண்டிருப்பதால், வரவேற்பு அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|