பதிவு செய்த நாள்
23 ஆக2015
14:45
ஹூண்டாய் நிறுவனத்தின், ‘கிரெட்டா’ கார், ரெனோவின், ‘டஸ்டர்’ மற்றும், ‘போர்டு’ நிறுவனத்தின், ‘இகோ ஸ்போர்’ ஆகிய எஸ்.யு.வி., மாடல்களுக்கு போட்டியாக, இந்தியாவில், ‘பிஆர் – வி’ வாகனத்தை ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனத்தை, இந்தோனேசியாவில், சமீபத்தில் நடந்த சர்வதேச ஆட்டோ ஷோவில், காட்சிப்படுத்தியிருந்த ஹோண்டா, அங்கு விற்பனையை துவக்கி விட்டது. அடுத்த சில மாதங்களில், இந்திய சாலைகளிலும் காணமுடியும். பக்கவாட்டு கதவுகள், சில ஏற்ற இறக்கங்களுடன்; அவற்றின்,‘லைனிங்’கும், எம்.யு.வி., மாடலான, ‘மொபிலியோ’வை போலவே அசத்தலாக உள்ளது. ஏழு பேர் அமரக்கூடிய, இந்த வாகனத்தின், இரண்டாம் வரிசையில் அமருவோர் வசதிக்காக, பிரத்யேக, ‘ஏசி வென்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. ‘டேஷ் போர்டு’ வெள்ளி நிறத்தில் இரு, ‘ஷேட்’களிலும் பொலிவுடன் காணப்படுகிறது. பின்புறம், எல்.இ.டி.,யிலான, ‘டெயில் லேம்ப்’கள் வாடிக்கையாளர்களை கவரும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|