பதிவு செய்த நாள்
04 செப்2015
10:13
மும்பை : மூன்று நாள் சரிவுக்கு பின்னர் நேற்று சற்று மீண்டு பங்குசந்தைகள் இன்று(செப்., 4ம் தேதி) மீண்டும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கின. ஆனால் சற்று நேரத்திலேயே பங்குசந்தைகள் மீண்டும் சரிய தொடங்கின. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவாலும், உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தாலும் இன்றைய வர்த்தகம் சரிவில் காணப்படுகின்றன. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 515.18 புள்ளிகள் சரிந்து 25,249.60 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 164.90 புள்ளிகள் சரிந்து 7,658.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. 257 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1523 நிறுவன பங்குகள் சரிவுடனும், 47 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி கொண்டிருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|