பதிவு செய்த நாள்
07 செப்2015
16:02
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தி்த்தது. வாரத்தின் துவக்கநாளான இன்று(செப்., 4) இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் சரிய தொடங்கிய பங்குசந்தைகள் சற்று ஏற்ற - இறக்கத்துடன் இருந்தன. ரூபாயின் மதிப்பு சரிந்தது, ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 308.09 புள்ளிகள் சரிந்து 24,893.81-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 96.25 புள்ளிகள் சரிந்து 7,558.80-ஆகவும் முடிந்தன. இதன்மூலம் சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. கடந்த 14 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் இப்படி ஒரு சரிவை சந்தித்து இருக்கிறது.
இன்றைய வர்த்தகத்தில், ஐசிஐசிஐ., ஆக்சிஸ், டாக்டர் ரெட்டி பெல் போன்ற நிறுவன பங்குகள் பெரும் சரிவையும், எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|