தங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவுதங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவு ... ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இளைஞர்களை ஈர்க்கும் கரி மோட்டார் ஸ்பீடுவே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2015
12:00

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது, கோவை மாவட்டம். முன் நூற்பாலைகள் நிறைந்திருந்த இங்கு, தற்போது வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. குறிப்பாக, எந்தவொரு கார் தயாரிப்பு நிறுவனமும், தங்களது புதிய மாடல்களை இங்கு அறிமுகப்படுத்துவது அதிகரித்து உள்ளது.
இதற்கு மற்றுமொரு மணிமகுடமாய் அமைந்துள்ளதே, கரி மோட்டார் ஸ்பீடுவே. கோவை நகரிலிருந்து, 15 கி.மீ., தொலைவில், செட்டிபாளையத்தை அடுத்து, வடசித்தூர் செல்லும் வழியில், பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 2.4 கி.மீ., தூரமுடையது; நேரானது.
எல்.ஜி.பி., நிறுவனத்தால், மறைந்த முன்னாள் கார் பந்தய வீரர், கரிவரதன் நினைவால், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதே, இந்த கரி மோட்டார் ஸ்பீடுவே. சென்னையில் இருங்காட்டுக்கோட்டையில், பந்தயங்கள் நடக்கின்றன. அதற்கடுத்து, ஈ.சி.ஆர்., என அழைக்கப்படும், கிழக்கு கடற்கரை சாலை, அறிவிக்கப்படாத பந்தய சாலையாக, இளைஞர்கள் மத்தியில் உள்ளது. அங்கு கார்களை விட, பைக்குகளில் அதிவேகமாய், ‘பறப்பவர்களின்’ எண்ணிக்கை அதிகம். பாதுகாப்பின்றி இப்பந்தயங்கள் நடக்கின்றன. மெட்ரோபாலிடன் சிட்டியான சென்னையை தவிர்த்து, மாநிலத்தில் வேறு எங்கும், பந்தய சாலை கிடையாது.
இதை மாற்றும் வகையில், மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளதே, கரி மோட்டார் ஸ்பீடுவே. துவக்கத்தில், எல்.ஜி.பி., நிறுவனத்தால் தேசிய அளவிலான மோட்டார் பைக் பந்தயங்கள் நடந்தன. தொடர்ந்து, ஜே.கே.டயர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கார் பந்தயங்கள் நடக்கின்றன. சிறுவர்களுக்கு, ஹோகார்ட் துவங்கி, முதியவர்கள் வரை பங்கேற்ற கார் பந்தயங்கள் நடந்தன. தற்போது பார்முலா – 4, எப்பி – 02 மற்றும் போக்ஸ்வேகன் நிறுவன கார்களுக்கான பந்தயங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. இத்தகைய வசதியால், தற்போது கோவையிலிருந்தும் பலர் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலங்களில், ‘பார்முலா – 1’ கார் பந்தயத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)