பதிவு செய்த நாள்
10 செப்2015
16:27
மும்பை : சரிவுடன் இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்டட சுணக்கம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் சரிந்தன. இருப்பினும் மதிய நேர வர்த்தகத்திற்கு பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் உயர்வால் பங்குசந்தைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.41 புள்ளிகள் சரிந்து 25,662.17-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 30.50 புள்ளிகள் சரிந்து 7,788.10-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1006 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1546 நிறுவன பங்குகள் சரிந்தும், 121 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|