தங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவுதங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்வு (ரூ. 66.34) இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்வு (ரூ. 66.34) ...
ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2015
16:55

சென்னை : எதிர்பார்த்ததை விட 2 மடங்கு அளவுக்கு, சுமார் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக சென்னை, உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெற்றது. விழாவின் நிறைவுநாளில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பேசியதாவது...
2014-15ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. இப்போது இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு வந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சுமார் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மின் உற்பத்தி துறையில் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடும், மீன்வளத்துறையில் ரூ.500 கோடியும், விவசாயத்துறையில் ரூ.800 கோடியும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1,900 கோடி முதலீடும் கிடைக்கவுள்ளது. உற்பத்தி துறையில் மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி முதலீ‌டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் 50 சதவீதம் முதலீடு செய்யப்பட இருக்கிறது. ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும். இணைதளம் வழியாக தொழில் தொடங்க அனுமதி பெறலாம். ‌
மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை திகழ்கிறது. ஒரு நிமிடத்தில் 3 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் உலகின் 10 இடங்களில் சென்னை இருக்கிறது.
உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். இனி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். அடுத்த முதலீட்டாளர் மாநாடு 2017-ல் நடக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)