பதிவு செய்த நாள்
13 செப்2015
14:29
மாருதி சுசூகி நிறுவனம், ‘பலேனோ’ கார் உற்பத்தியை துவங்கியுள்ளது. இந்த, ‘ஹேட்ச்பேக்’ ரக கார், மாருதி சுசூகியின், ‘ஸ்விப்ட்’ காருக்கு அடுத்த நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டாமல், ‘ஒய்.ஆர்.ஏ.,’ என்ற குறியீடு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காருக்கு, ‘பலேனோ’ என பெயர் சூட்ட, மாருதி சுசூகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாகனம், இம்மாத இறுதியில், ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் நடக்கும் உலக வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பாவுக்கு, ‘பலேனோ’ கார் ஏற்றுமதியாவதற்கான பணி துவங்கி உள்ளது. இந்தியாவில், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில், இது மார்க்கெட்டில் கிடைக்கும். இது, ஹுண்டாய் நிறுவனத்தின், ‘ஐ20’ மற்றும் ஹோண்டா நிறுவனத்தின், ‘ஜாஸ்’ ஆகிய கார்களுக்கு போட்டியாக விளங்கும். இதில், ‘ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 2 -டின் மியூசிக் சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்’ என, பல சிறப்பு அம்சங்கள் இடம் பெறும் என தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|