பதிவு செய்த நாள்
13 செப்2015
14:40
டொயோட்டா நிறுவனம், விரைவில், ‘இன்னோவா’வின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிறுவனம், சமீபத்தில், ‘பார்ச்சுனர்’ எஸ்.யு.வி.யின், மேம்படுத்தப்பட்ட மாடலை, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்தது.அதைத் தொடர்ந்து, மற்றொரு தயாரிப்பான, ‘இன்னோவா’ பன்முக பயன்பாட்டு வாகனத்தின் புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அது, ஜகார்த்தாவில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள, சர்வதேச ஆட்டோ திருவிழாவில், காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த புதிய வாகனம், தற்போதைய டொயோட்டாவை விட நீளமாக காணப்படுவதால், உள்புற இடவசதி அதிகரிக்கப்பட்டு இருக்கலாம். இதன், 2.4 லிட்டர் இன்ஜின், டொயோட்டா நிறுவனத்தின், சமீபத்திய, ‘ஜிடி சீரிஸ்’ தொழில்நுட்பத்தில், 148 குதிரை சக்தி திறனுடையது. இந்தியாவில் இதன் அறிமுகம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|