பதிவு செய்த நாள்
18 செப்2015
10:15
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இன்று(செப்., 18ம் தேதி) துவங்கிய பங்குந்தைகள், வர்த்தகநேர துவக்கத்தின் போது மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.22 புள்ளிகள் உயர்ந்து 26,305.19 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 101.10 புள்ளிகள் உயர்ந்து 8000.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாது இருப்பதன் எதிரொலியாக உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன. இதன்காரணமாக இந்திய பங்குசந்தைகளும் அதிக ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மேலும் ரூபாயின் மதிப்பு உயர்வும், இந்திய பங்குசந்தைகள் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. இன்றைய வர்த்தகத்தில் 1231 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 281 நிறுவன பங்குகள் சரிந்தும், 48 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி கொண்டிருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|