பதிவு செய்த நாள்
26 செப்2015
18:54
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல், ஸ்போர்ட்ஸ் காரான, ‘டி.சி., அவாந்தி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2012ல், டில்லியில் நடைபெற்ற ஆட்டோ ஷோவில், திலீப் சாப்ரியா என்ற தொழில் முனைவர், இதை காட்சிப்படுத்தியிருந்தார்; தற்போது அதை தொழில் முறையில் சந்தைப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள டி.சி., நிறுவனத்தின் ஆலையில், இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள, 2.0 லிட்டர், ‘டர்போ சார்ஜ்ட்’ இன்ஜின், ரெனோ நிறுவனத்திடம், கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கார், 249 குதிரைசக்தி திறனுடன், ஆறு வினாடிகளில், 100 கி.மீ., வேகத்தை எட்டக்கூடியது. அவாந்தி, அதிகபட்சம் மணிக்கு, 180 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இதன் ஷோரூம் விலை, 35.93 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|