பதிவு செய்த நாள்
07 அக்2015
12:38
புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, 250 டன் வெங்காயம், மும்பை துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. இதையடுத்து, வெங்காயத்தின் விலை, விரைவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை, சமீபகாலமாக அதிகரித்தது. வடமாநிலங்களில், ஒரு கிலோ வெங்காயம், 60 ரூபாய் வரை விற்கப்பட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பை துறைமுகத்துக்கு, 250 டன் வெங்காயம் நேற்று வந்திறங்கி உள்ளது; இன்னும், 2,000 டன் வெங்காயம், இந்த வார இறுதிக்குள் வந்துவிடும். இதனால், வெங்காயத்தின் விலை, விரைவில் குறையும். இதேபோல், 3,223 டன் பருப்பு வகைகள், மும்பை, சென்னைக்கு ஏற்கனவே வந்துவிட்டன; மேலும், 2,000 டன் விரைவில் வந்துவிடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|