பதிவு செய்த நாள்
09 அக்2015
12:54
நம் நாட்டில், இருசக்கர வாகனங்களை அதிகளவில் விற்பனை செய்யும், ‘ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா’ நிறுவனம், செப்டம்பர் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனை சந்தையில், 27 சதவீதம், தங்கள் வசம் இருப்பதாக கூறும், இந்நிறுவனத்தின் விற்பனை, செப்டம்பரில், 2 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆகஸ்டில், 1.79 லட்சமாக இருந்த, இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை, செப்டம்பரில், 1.46 லட்சமாக குறைந்துள்ளது.
ஆனாலும், இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை, 2.41 லட்சத்தில் இருந்து, 2.64 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நல்ல காரியங்கள் செய்ய உகந்த தினமாக கருதப்படும், விநாயகர் சதுர்த்தியன்று மட்டும், 58 ஆயிரம் வாகனங்களை விற்றுள்ளது. அத்துடன், இளைஞர்களை ஈர்ப்பதற்காக, ஸ்டைலான தோற்றமுடைய, ‘சி.பி., ஹார்னெட் 160 ஆர்’ பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|