பதிவு செய்த நாள்
14 அக்2015
11:46
மதுரை: ஸ்ரீராம் ஆட்டோமால் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள் பரிமாற்றம் மற்றும் வர்த்தக சேவைகளை அளிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் மதுரையில், 12-ம் தேதி அக்டோபர் மாதம் 2015, அன்று தனது புதிய ஆட்டோமால் செயல்பாட்டை ஆரம்பித்திருக்கிறது. இந்த புதிய ஆட்டோமால், சுமார் 9.11 ஏக்கர் பரப்பளவில், மதுரையின் மிக முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. மதுரையையும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் போக்குவரத்து துறையினர் ஒப்பந்தகாரர்கள், முகவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தனிநபர் விற்பனையாளர், வாடிக்கையாளர்களுக்கு உபயோகப்படுத்தபட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள் தொடர்பான அனைத்துவிதமான தீர்வுகளையும், இந்த புதிய ஆட்டோமால் இனி வழங்கும்.
"தென்னிந்திய பகுதிகளில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 21 ஆட்டோமால்களைத் தொடர்ந்து, தற்போது மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் புதிய ஆட்டோமால், ஸ்ரீராம் ஆட்டோமால் இந்தியா நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டை மேலும் உறுதியுள்ளதாக்கி இருக்கிறது. மிகவும் வெளிப்படையான அணுகுமுறை, ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனை நிர்ணய செயல்முறைகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் எங்கள் நம்பிக்கையை மேன்மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
மதுரையானது, ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட பயணிகள் வாகனங்கள், வர்த்தக செயல்பாடுகளுக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (பிசிக்ஷி’s) ஆகியவற்றிக்கான தேவைகள் அதிகமுள்ள சந்தையாக திகழ்கிறது. இந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நியாயமான, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகளின் தளமாக ஸ்ரீராம் ஆட்டோமால் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கும். இதற்கேற்ற வகையில், அதன் அமைவிடமும் மிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கிராமங்களை பல வழிகளை இணைக்கும் வசதிகள், ஹைவேக்கள் ஆகியவற்றின் மூலம் புதிய ஆட்டோமால் இணைக்கப்பட்டுள்ளது” என்று ஸ்ரீராம் ஆட்டோமால் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமீர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|