அக்.,15 காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வுஅக்.,15 காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ... அக்.,16 காலையில் ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.64.95 அக்.,16 காலையில் ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.64.95 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கிலோவுக்கு ரூ.200 வரை உயர்ந்த பருப்பு விலை: பரிதவிக்கும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2015
09:23

மும்பை : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பருப்பு வகைகளின் விலை, கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.200 வரை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வரும் நாட்களில் அத்யாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான பருப்பு வகைகளின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை சந்தையில் கடந்த ஆண்டு ரூ.90 ஆக இருந்த பருப்பின் விலை தற்போது ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.85 ஆக இருந்த ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை, தற்போது ரூ.160க்கு விற்கப்படுகிறது.
ஒழுங்கற்ற வானிலை, விளைச்சல் சரிவு, இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், இந்த அதிரடி விலை உயர்வு மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அத்துடன் இந்த விலைஉயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதால், மக்களிடம் அரசு மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்க, காய்கறிகளின் விலையும் மறுபுறம் உயர்ந்து வருகிறது.
சங்கிலித் தொடர் போன்று பருப்பு வகைகளின் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையையும் உயர்த்தி உள்ளது. இதனால் சராசரி குடிமகனின் மாத பட்ஜெட்டை திக்கி திணற வைத்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பருப்பு வகைகளின் விலையை குறைக்க அதிக அளவில் பருப்பு இறக்குமதி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசு கூறினாலும், சாமானிய மக்களுக்கு அது சமாதானம் தரவில்லை. இதனால் அத்தியாவமிய உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த என்ன வழி என சந்தை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)