பதிவு செய்த நாள்
16 அக்2015
17:07
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(அக்., 16ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 204 புள்ளிகளும், நிப்டி 58 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது சரிவுடன் துவங்கின. ஆனால் நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 10வது மாதமாக உயர்ந்தது, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 204.46 புள்ளிகள் உயர்ந்து 27,214.60-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 58.65 புள்ளிகள் உயர்ந்து 8,238.15-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 10 நிறுவன பங்குகுள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|