பதிவு செய்த நாள்
24 அக்2015
17:52
சமீபத்தில் அறிமுகமான, புதிய வால்வோ, ‘எக்ஸ்சி 90’ எஸ்.யு.வி., வாகனம், 2015ன், ‘உலக பெண்கள் கார்’ விருதை வென்றுள்ளது. ஆறு பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்ற இறுதிச்சுற்றில், 13 நாடுகளைச் சேர்ந்த, 19 பெண் நடுவர்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது. இறுதிச்சுற்று ஓட்டு, சர்வதேச நிறுவனத்தின் கண்காணிப்பில், ரகசியமாக நடைபெற்றது.
விருது குறித்து, ‘வால்வோ கார்ஸ்’ நிறுவன தலைவர், ஹகன் சாமுவேல்சன் கூறும்போது, ‘‘இந்த, எக்ஸ்சி 90 வாகனத்தில் துவங்கி, இதர மாடல்களின் மேம்படுத்தப்பட்ட கார்களை, வால்வோ அறிமுகம் செய்ய துவங்கியது. அது முதல், மேலும் சிறப்பாக பயணித்து, தற்போது, இந்த சிறப்பான விருதை வென்றிருக்கிறோம். அதனால், மகிழ்ச்சியும், கவுரவமும் அடைந்துள்ளோம்,’’ என்றார்.
இந்தப் போட்டியில், ‘ரெனோ எஸ்பேஸ்’ வாகனம், சிறந்த குடும்ப வாகனமாக தேர்வு பெற்றது. ‘பட்ஜெட் கார்’ பிரிவில், ‘சையான் ஐஎம்டொயோட்டா – டொயோட்டா அவ்ரிஸ்’ பரிசைத் தட்டிச் சென்றது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத கார் பிரிவில், ‘பிஎம்டபிள்யூ ஐ8’ வாகனம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|