பதிவு செய்த நாள்
26 அக்2015
10:26
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. வாரத்தின் துவக்கநாளான இன்று(அக்., 26ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 147.33 புள்ளிகள் உயர்ந்து 27,618.14-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 40.85 புள்ளிகள் உயர்ந்து 8,336.30-ஆகவும் இருந்தன.
வட்டி விகிதத்தை சீன குறைத்ததன் எதிரொலியாக இந்திய உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கி 1.21 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.25 சதவீதமும், ஷாங்காயின் இண்டக்ஸ் 0.79 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எல் அண்ட் டி., ஐசிஐசிஐ., உள்ளிட்ட அனேக நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|