பதிவு செய்த நாள்
26 அக்2015
16:48
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள், சரிவுடன் முடிந்தன. வட்டி விகிதத்தை சீனா குறைத்தன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பித்தன. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 108.85 புள்ளிகள் சரிந்து 27,361.96-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 34.90 புள்ளிகள் சரிந்து 8,260.55-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் சரிந்தும், 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும் ஒரே ஒரு நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|