பதிவு செய்த நாள்
27 அக்2015
19:28
‘மெர்சிடெஸ் பென்ஸ்’ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, 55 உயர் ரக கார்களை, ‘லீஸ்’ அடிப்படையில், மத்திய அரசு வாங்க உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, இந்த கார்கள் வாங்கப்பட உள்ளன.
‘‘பொதுவாக, இந்தியா உட்பட, பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் அதிகாரிகள், மெர்சிடெஸ் பென்ஸ் காரில் பயணம் செய்ய விரும்புகின்றனர். அது, எங்களுக்கு மிகுந்த கவுரவத்தை தருகிறது. எங்கள், இ – கிளாஸ் சொகுசு காரை மத்திய அரசு பயன்படுத்த இருப்பது, எங்களின் தரத்துக்கு சிறந்த உதாரணம்,’’ என்கிறார் அந்த நிறுவனத்தின், இந்தியா பிரிவு தலைவர் ரோலண்ட் போல்ஜர்.
கடந்த, 1995 முதல் இதுவரை, 30 ஆயிரம் இ – கிளாஸ் கார்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|