பதிவு செய்த நாள்
02 நவ2015
17:15
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனே இருக்கிறது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, தனியார் சர்வே ஒன்று இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 50.7 சதவீதமாக சரியும் என கூறியிருப்பது, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 97.68 புள்ளிகள் சரிந்து 26,559.15-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 8,050.80-ஆகவும் முடிந்தன. கடந்த 6 நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 911.66 புள்ளிகள் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 4.85 சதவீதம் சரிந்தது. இவை தவிர்த்து ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி., சன் பார்மா, சிப்லா போன்ற நிறுவன பங்குகளும் சரிந்தன.
மாருதி சூசுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ., டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|