சரிவிலிருந்து ரூபாயின் மதிப்பு மீண்டது - ரூ.65.40சரிவிலிருந்து ரூபாயின் மதிப்பு மீண்டது - ரூ.65.40 ... 20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை 20 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மழைகாலமும்... வாகன பராமரிப்பும்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2015
10:13

மழை காலத்தில் வாகனங்களை சரியாக பராமரித்து வந்தாலே, விபத்துக்களை தவிர்க்கலாம்; நடுவழியில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது.
டயர் பராமரிப்பு
* டயர்களில் காற்றின் அளவை முறையாக கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டும்; குறைவாக இருந்தால் சரியான அளவுக்கு நிரப்ப வேண்டும்.
* காற்று குறைவாக இருந்தால், வாகனத்தில் ஆணி போன்ற கூர்மையான பொருட்கள் எளிதில் குத்தி, டயரை பஞ்சராக்கிவிடும். அதுவும், ‘டபுள்ஸ்’ போகும் போது, இதற்கான வாய்ப்பு அதிகம். காற்று அதிக அளவில் இருந்தால், ‘பிரேக்’ பிடிக்கும் போது திடீரென, ‘கிரிப்’ குறையும்.
* பொதுவாக, டயரில் காற்றின் அளவை பராமரிக்கா விட்டால், எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
* டயர்களில் உள்ள, ‘டிரெட்’ எனும் பற்கள், சரியாக உள்ளனவா என வாரம், ஒரு முறை சோதிக்க வேண்டும். அவை தேய்ந்து போயிருந்தால், விபத்தில் சிக்கவும், பஞ்சராகவும் வாய்ப்பு அதிகம்.
* டயர் பஞ்சராகும் போது, தள்ளிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாத வரை பரவாயில்லை. தள்ளிச் செல்லவேண்டி இருந்தால், டயரில் குத்தியிருக்கும் கூர்மையான பொருளை எடுத்துவிட வேண்டும். இல்லையேல், டயர் சுழலும் போது, ‘டியூப்’ சேதமாகி விடும்.
* சாலையோர கடைகளில், சிலர், தரம் குறைந்த, ‘டியூப்’ பொருத்தி விடுவர். அது, எப்போது வேண்டுமானாலும் காலை வாரும். அதனால், தரமான, ‘டியூப்’களை பொருத்த வேண்டும்.
* டயர்களின், ‘அலைன்மென்ட்’ சரியாக இருக்கிறதா என, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் பரிசோதிக்க வேண்டும்.
* காராக இருந்தால், ‘ஸ்டெப்னி’யை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். டயரை, கழற்றி மாட்ட தெரிந்து கொள்வது நல்லது.
பைக்: இன்ஜின் பராமரிப்பு
* மோட்டார் பைக்கின் இதய பகுதியான, இன்ஜினின் செயல்பாட்டை வைத்தே, வாகனத்தின் ஆயுள் கணக்கிடப்படுகிறது.
* பைக்கில், இன்ஜின் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்பதை கண்காணிப்பது அவசியம்.
* இன்ஜின் ஆயில் அளவு குறைவாக இருந்தால் உடனே, ‘டாப் அப்’ செய்ய வேண்டும். இன்ஜின் ஆயிலை குறைவான அளவில் வைத்து வாகனத்தை ஓட்டினால், முதலுக்கே மோசம் என்பது போல, இன்ஜின் பழுதாகி விடும். அதேபோல, ஆயில் கசிவு இருக்கிறதா என்றும் சரி பார்க்க வேண்டும்.
* பைக்கை கழுவும் முன், ‘ஸ்டார்ட் பட்டன் ’ மற்றும் சுற்றியுள்ள இடங்கள், ‘எச்.டி., காயில், சைலன்ஸர்’ ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர் போட்டு மூட வேண்டும். பெயின்ட் பூசப்பட்ட இடங்களில், கெரசின், சோப் போட்டு கழுவ கூடாது.
* பைக் பேட்டரியில், ‘எலக்ட்ரோலைட்’ அளவு சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல், ‘டிஸ்டில்ட் வாட்டர் ’ இட்டு நிரப்ப வேண்டும்.
* வாகனத்தை ஓட்டாமல் இருந்தாலும் பேட்டரியில், ‘எலக்ட்ரோ லைட்’ அளவை சரியாக பராமரிக்க வேண்டும்.
‘பிரேக், ஸ்பார்க் பிளக்....’
* பொதுவாக, ‘2 ஸ்டிரோக்’ பைக்கில், ‘ஸ்பார்க் பிளக்’கை, 750 கி.மீ., பயணத்திற்கு பிறகும், ‘4 ஸ்டிரோக்’ பைக்கில், 1,500 கி.மீ., பயணத்திற்கு பிறகும் சுத்தம் செய்யவேண்டும். ‘எமரி பேப்பர்’ வைத்து, ஸ்பார்க் பிளக் பாயின்ட்டை சுத்தம் செய்யலாம்.
* பிரேக், ‘லூசாகவோ, டைட்டாகவோ’ இருந்தால் ஆபத்து. வாகன ஓட்டியின் வசதிக்கேற்ப அது முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ‘பிரேக், கிளட்ச்’ வயர்களை புறப்படுவதற்கு முன் சரிபார்ப்பது சிறந்தது. இன்சூரன்ஸ் மற்றும் வாகன வரி ரசீது நகல்களை எப்போதும் பைக்கில் வைத்திருக்க வேண்டும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)