பதிவு செய்த நாள்
12 நவ2015
12:31
கியர் மாற்றும் போது, ‘கிளட்ச்’ தேவைப்படாத, ஏ.எம்.டி., எனப்படும், ‘ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்’ மாடல் கார்களுக்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சமீபத்தில், மகிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள, ‘டியுவி 300’ எஸ்.யு.வி., வாகனமும், அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
அந்த வாகனத்தை இதுவரை பதிவு செய்துள்ள, 12 ஆயிரம் பேரில், 50 சதவீதம் பேர், ஏ.எம்.டி., மாடல் வாகனத்தை வாங்கவே முன்பணம் செலுத்தி உள்ளனர். அதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அதை அவர்கள், ஒரு பொருட்டாக கருதவில்லை. ‘‘இந்த மாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை,’’ என்கிறார், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோயங்கா.
‘டியுவி 300’ வாகனம், செப்டம்பரில் அறிமுகமான போது, ஷோரூமில், அதன் ஆரம்ப மாடலின் துவக்க விலை, 6.90 லட்சம் ரூபாய். அதே நேரத்தில், ஏ.எம்.டி., மாடல்களான, ‘டி6’ மற்றும், ‘டி8’ ஆகிய மாடல்களின் விலை, முறையே, 8.52 லட்சம் மற்றும், 9.12 லட்சம் ரூபாய். இந்தியாவில், சிறிய ரக எஸ்.யு.வி., வாகன பிரிவில், இதில் தான் முதன்முறையாக, ஏ.எம்.டி., வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|