பதிவு செய்த நாள்
13 நவ2015
10:39
மும்பை : தீபாவளியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்கள் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று(நவ.13ம் தேதி) துவங்கிய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.41 புள்ளிகள் சரிந்து 25,638.54-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 80.75 புள்ளிகள் சரிந்து 7,744.25-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் உயர்வு, தொழில்துறை உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 2.09 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.89 சதவீதமும், ஷாங்காய் பங்குச்சந்தை 1.01 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|