பதிவு செய்த நாள்
13 நவ2015
10:44
புதுடில்லி:தடையை தகர்த்து, மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள, 'மேகி நூடுல்ஸ்' சமீபத்தில், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் சாதனை படைத்துள்ளது. ஐந்தே நிமிடங்களில், 60 ஆயிரம் மேகி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுஉள்ளன.
தடை விதித்தது: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, 'நெஸ்லே இந்தியா' நிறுவனம், மேகி நூடுல்ஸ் என்ற உணவுப் பொருளை விற்பனை செய்து வந்தது; இதில், காரீயம், ரசாயன உப்பு அதிக அளவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்யவும், தயாரிக்கவும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது.
இதை எதிர்த்து, நெஸ்லே நிறுவனம், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், மேகிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இதையடுத்து, மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் பணியை, நெஸ்லே நிறுவனம், மீண்டும் துவக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில், நாடு முழுவதும் உள்ள கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான, 'ஸ்நாப்டீல்' மூலமாக, 'மேகி வெல்கம் கிட்' என்ற பெயரில், மேகி நூடுல்சை விற்பனை செய்ய, நெஸ்லே நிறுவனம் திட்டமிட்டது. ஒவ்வொரு பாக்கெட்டிலும், 12 மேகி மசாலா பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றுடன், 2016க்கான காலண்டர், மேகி போஸ்ட் கார்டு, 'பிரிட்ஜ்'ல் ஒட்டக் கூடிய காந்தம் உள்ளிட்ட பரிசுப்பொருட்களும், இந்த வெல்கம் கிட்டில் இடம் பெற்றிருக்கும்.
விற்று தீர்ந்தது: இதற்கான முன்பதிவு, 9ல், துவங்கியது. முன்பதிவு துவங்கிய, ஐந்தே நிமிடங்களில், 60 ஆயிரம் கிட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக, ஸ்நாப்டீல் வர்த்தக இணையதள நிறுவனத்தின் துணை தலைவர், டோனி நவீன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|