பதிவு செய்த நாள்
13 நவ2015
17:49
மும்பை : இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிந்தது, பணவீக்கம் உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 256.42 புள்ளிகள் சரிந்து 25,610.53-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 62.75 புள்ளி்கள் சரிந்து 7,762.25-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ்., எல்அண்ட்டி., மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட அநேக பங்குகள் சரிவுடன் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|