பதிவு செய்த நாள்
16 நவ2015
16:55
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. வர்த்தக வாரத்தின் துவக்கநாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியபோதும், இன்று அக்டோபர் மாத பணவீக்கம் வெளியானது. தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேலாக பணவீக்கம் சரிவுடன் இருப்பதுடன் பணவாட்டத்தில் இருப்பதாலும், இதன்காரணமாக முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இறுதியில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 149.57 புள்ளிகள் உயர்ந்து 25,760.10-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 44.35 புள்ளிகள் உயர்ந்து 7,806.60-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. வங்கித்துறை தொடர்பான பங்குகள் 1.51 சதவீதமும், எப்எம்சிஜி., தொடர்பான பங்குகள் 0.50 சதவீதமும், மருத்துவம் துறை சார்ந்த பங்குகள் 0.49 சதவீதமும் உயர்ந்து
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|